செயலாளரின் உரை

திக்வெல்ல மக்களுக்கு தகவல்களை வழங்கும் ஊடகமாக இந்த இணையத் தளத்தை ஆரம்பிக்கக் கிடைத்தமையையிட்டு நாம் மிக மகிழ்ச்சி அடைகிறோம். நமது உள்ளூராட்சி நிறுவனத்தின் தகவல்களை இதனூடாக பகிர்ந்து கொள்வதன் மூலம் மக்களுக்கு ஆற்றும் சேவைகளை மேலும் பயனுள்ளவையாக மாற்ற முடியும் என்பது எனது நம்பிக்கை. வாக்குகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் போன்றே இந்த உள்ளூராட்சி நிறுவனத்தின் அனைத்து தராதரங்களையும் சேர்ந்த எல்லா ஊழியர்களும் நமது உள்ளூராட்சி நிறுவனத்தின் முன்னேற்றத்திற்காக இரவு பகல் பாராது அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றார்கள். இவ்விணையத்தளத்தினூடாக அதிகாரத்துக்குட்பட்ட பிரதேசத்தினது போன்றே இந்நாட்டு மற்றும் வெளிநாட்டு மக்களதும் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளக்கூடிய ஒரு வாயிலாக மிகப் பெறுமதியானதொரு சேவையை வழங்க முடியும் என்று எதிர்பார்க்கிறேன்.

மேலும், நாம் வழங்கும் சேவைகளுக்கான வழிகாட்டல்களையும் இவ்விணையத்தளத்தினூடாக பெற்றுக் கொள்ள முடியும்.  எதிர்காலத்தில் இவ்விணையத்தளத்தினூடாக வாடிக்கையாளர்களது சேவைகளின் அல்லது முறைப்பாடுகளின் நிகழ்கால நிலை பற்றி அறிந்து கொள்வதற்காக இலகுவானதொரு வழியை உட்புகுத்தி மேம்படுத்த எதிர்பார்க்கிறேன். அதற்காக இவ்விணையத்தளத்தை பரஸ்பர தொடர்புகள் உள்ள இணையத்தளமாக உருவாக்க அனைத்து குடிமக்களினது பங்களிப்பை வெகுவாக எதிர்பார்க்கிறேன்

நீங்கள் எம்முடன் இணைந்திருந்து நீங்கள் எம்மிடமிருந்து எதிர்பார்க்கும் சேவைகளை மேம்படுத்திக் கொள்ள உங்களது பங்களிப்பை குறையற வழக்குவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

வினைத்திறனுள்ள சேவைக்காக இச்சந்தர்ப்பத்தின் மூலம் உச்சபட்ச பிரயோசனத்தை பெற்றுக் கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.

நன்றி.

சாந்தனி வேரகொட,

செயலாளர்,

திக்வெல்ல பிரதேச சபை.